Friday, October 26, 2012

அடவும் தன்னுடலேற்றலும்

நம்மைப் பற்றிச் சிலாகித்திருக்கையில்
நீ வந்து போன இடங்களிலெல்லாம்
அவனை நிரப்பிக் கொண்டிருந்தான்
நீயாகிப் போவானோ என்கிற
துணுக்குறலில்
அதட்டி அடங்க வைத்தேன்
என் மனதையும்
நீயாகிப் போன அவனையும்!

இதுவரை சொன்னதில்
நடந்து போனது அவனென்று
நினைத்துக் கொண்டிருக்கிறான்
இழந்ததில் ஏதோவொன்றை
மீட்டெடுத்த உடல்மொழியில்
மந்தகாசமாய்ச் சிரிக்குமவன்
மழலையில் மெய்மறக்கிறேன்
சட்டென்று ஒளியிருளும்
மதிமுகத்தை எதிர்கொள்ள
ஆயத்தங்களில்லை என்னிடம்
தொடர்ந்தபடியிருக்கிறது
நீ அவனாவதும்
அவன் தன்னுடலேற்பதும்!

பள்ளிக்கூடக் கதைகேட்கும்
அம்மாவாய்
சிறுமியின்
எல்லாச் சிலிர்ப்புகளையும்
உள்வாங்கி எதிரொளிக்கிறதவன்
நயனங்கள்

கடவுளோடும் சாத்தானோடும்
உறவாடும் வல்லமைபடைத்தவன்
பாசத்தில் எம்பக்கமிருப்பதில்
பெருமிதம் கலந்ததொரு பயம்

நினைக்கவே நடுக்கமாயிருக்கிறது
நீ கொன்றுவிட்ட என்மனதை
உயிரற்றது என்றிவனறியும் நாளில்
சோதியிழந்த அவன் முகம்

மானுடவெளி தாண்டிய
கடவுளையோ
சாத்தானையோ
எதிர்கொள்ள வேண்டியிருக்குமந்த
துயரமிகு நாளில்
அடவு கலையாதிருக்க
விழிகள்
கண்ணீரற்றுப் போகட்டும்!

4 comments:

பழமைபேசி said...

வாழ்த்துகள்!!

மதி said...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

சீனிவாசன் said...

nice one congrats!!!!

சீனிவாசன் said...

nice one great!!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!