Wednesday, October 3, 2012

நிறம்

கிடத்தப்பட்ட பிணம்
சிதைச்சூட்டில் எரியத்துவங்கியதும் 
கருகும் தோல் முழுதும்
மலரத் துவங்கின
செம்மஞ்சள் நிறமலர்கள்
உயிரற்ற உடலெங்கும்
அடையாளங்கள் அழிந்து
தசை தின்று சாம்பல் துப்பி
உயர்ந்து புகையாகி
சுவாசம் நிறைத்தது
தீயெனும் காலம்
அரூபமான ஆன்மா
மெல்ல அறியத்துவங்கியது
தன்னுடலின்
கடைசி பரிமாணத்தை!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!