Thursday, July 7, 2016

காற்றுவெளியிடை....

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே................
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும்....
இதழ்களும்..
இப்படி திரைவடிவம் பெற்றிருக்கும் இந்தப் பாடல் அடிக்கடி முணுமுணுக்கப்படும்.
இதழ்களும் ... என்று நிறுத்துகையில் சிரிப்பு வந்துவிடும். சில சமயங்களில் நாமே நம்மை பைத்தியமென்று உணரும் தருணங்களில் சிரிப்பு வரும் தானே! அதுபோலான பெரும்பான்மையான தருணங்கள் மிக மிக ரகசியமானவை. அதனாலே மிகவும் அழகானதும் கூட...
இந்த பாரதி எத்தனை ரசனை மிகுந்த கவிக்காதலன்?
”வீணையடி நீயனக்கு மீட்டும் விரல் நானுனக்கு”
மனதில் விரியும் காட்சியில் வெட்கம் வந்து போர்த்திக் கொள்ளும்.
முன்னொரு காலத்தில் இந்த நாசூக்கான காதல் வரிகளுக்காக் தேடிப் படிந்த கவிதைகள் ஏராளம். இப்போதெல்லாம் ஏன் அந்தக் கவிதைகள் பேத்தலாய் தோன்றுகின்றன?
அன்பே ஆருயிரே போன்ற தினசரி கவிதைகளை தாண்டியாயிற்று.
எப்படி இத்தனை ஆண்டுகள் கடந்தும் பாரதி மட்டும் நிகரில்லாத
கவியாய் எனக்குத் தோன்றுகிறார்?
அவராவது இன்னும் மாற்று சிந்தனைக்கு ஆட்படாமலிருக்கிறார் என்னுள் என்கிற ஆசுவாசத்தோடே,
பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!
காற்று வெளியிடைக் கண்ணம்மா....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!