Friday, November 9, 2012

கண்டடையும் கணம் வரை


ஒரு கவிதையைச் சுமந்தபடி
அலைகிறதென் நினைவுகள் 
அடைப்புக்குறிகளுக்குள் பூட்டப்படாத 
சுதந்திர வனத்தில் 
தலைப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன் 
வாகாய் அமரவியலாத கோபத்தில் 
வழக்கத்தை விட ஆக்ரோசமாய் 
கத்திக் கொண்டிருக்கின்றன வார்த்தைகள் 
வலிகளைத் தாங்கிப் பழகிய 
தோள்களில் ஏற மறுக்கிறது 
கவிதை 
வேதனை சுமத்திய வடுக்கள் 
காரணமாயிருக்கலாம் 
அழகியல் மினுக்கப் பூந்துவலையொன்றை 
விரித்து விட்டு அழைக்கிறேன் 
சமரசங்களைப் பின்னுக்குத் தள்ளி 
விசும்பத் தொடங்கியது 
வடுக்களின் வலி உணர்ந்தது 
காரணமாயிருக்கலாம் 
சுட்டு விரல் கொண்டதன் கண்ணீர் துடைக்க 
நுனியிலிருந்த தலைப்பு 
அழிந்தே போயிற்று 
நான் தலைப்பைத் தேடுவதும்  
கவிதை என் தலைவருடுவதுமாக 
இதோ இவ்வனமெங்கும் சுற்றியலைகிறோம்..
கண்டடடையும் கணம் வரை 
தனிமை கவிதையாகவும்
கவிதை வாழ்க்கையாகவும் 

நீளுமிந்த நேசம்

1 comment:

அ. வேல்முருகன் said...

தலைப்புகாக தவிப்பா?

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!