Monday, September 24, 2012

நந்தனார்

கனன்ற நெருப்பில்
சிதைந்து போனது
புலையர்பாடி அடையாளங்கள்
சிதையின் புகையில்
கலந்த ஆன்மா
எவரையும் சட்டைசெய்யாமல்
சிவனையடைந்தது
நந்தன் அடியாரானது தெரியாமலே
ஆன்மசுத்தி மந்திரங்கள் முழங்கியபடியிருந்தனர்
தில்லையம்பதியின் வேதவிற்பனர்கள்
முன்னதை போல இதற்கும்
சிலையென சிரித்தபடியிருந்தான்
சித்தனான சிவக்கடவுள்!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!