Saturday, September 22, 2012

முன்னோடிகள்

மழிக்கப்பட்டத் தலையுடன்
காவி அங்கிகள் போர்த்தி
தழையத் தழைய நடந்து போகிறார்கள்
மடாலயச் சிறுவர்கள்
உச்சாடனங்கள் செய்தவாறு
வெற்றுக்கால்களுடன்
எறும்பென ஊர்கிறார்கள்
மனிதம் புழங்காத அப்பெரும்மலை
கூச்சத்தால் சிலிர்க்கிறது
கடைசிச் சிறுவன் மலையுச்சி
தொட்டவுடன் கர்ஜிக்கிறான்
அடிவாரத்தை நோக்கி
“வாருங்கள்!
பாதை  செய்தாகிவிட்டது!”
பிஞ்சுக் கால்கள் விரிந்த்துவிட்ட
இரத்தக் கம்பளங்களில்
பயணிக்கிறார்கள் அவர்கள்
உறுத்தலேதுமின்றி!

1 comment:

மதி said...

very deep words.. brings out the contrast in characters between the initial lines and the end very well

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!