Tuesday, October 12, 2010

திருக்கூத்து

அருஞ்சுவை உண்டி அமரவர் உப்பரிக்கை
அம்பாரி பவனி ஆஞ்சநேயம் வியந்தோதி
வான்பொழி அமிழ்தம் அந்தாதி பிதற்றல்
மேருகொள் தீரம் ஆழியமிழ் பொறைமை
உளங்கனி திருவருட் சிந்தை பகர்ந்து
சொலவடை இலக்கணம் கூறு பிரித்து
சிலேடை முகர்ந்து சிறுநகையூட்டி மீள,
ஆவிபோக்கி மிடரு விழுங்கும் வன்பசி
அல்லையரற்றி அறுந்துவிழும் சுவைநரம்புகள்
கரவொலி கேட்டு கண்ணொளியது உயிர்பெற
கதிரவன் தகித்தும் அகமலர்ந்து குரல்மீட்டி
மாயவன் எழிலை மாசற வடிக்கலானான்
காலாஞ்சி சிறுகடலை கைப்பிடிச்சோறு தாம்பூலத்தோடு
இறைவன் சூடிக்கழித்த மாலையும் கைவர!

4 comments:

கவி அழகன் said...

தனிதமிழ் வளத்தமிழ் கவிதை
வாசிக்க வாசிக்க அருமை

சுசி said...

எப்டி கயல்..

எனக்கும் கத்துக்குடுங்களேன் :)

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்குங்க..

கயல் said...

@ யாதவன்

நன்றிங்க

@ சுசி

கிண்டல் பண்ணாதீங்கப்பா. நன்றி சுசி!

@ “உழவன்” “Uzhavan"

நன்றிங்க!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!