Friday, October 8, 2010

அறிவிலி


பற்றி எரிகையிலும் பூப்பூக்க
உன்னால் மட்டுமே முடியும்
'மத்தாப்பூ'!

சுற்றி எரிகையிலும்
உள்ளே,
பூகம்பம் வெடிக்கையிலும்
சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய்
பாசாங்கு செய்ய
என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து

எள்ளி ந‌கையாடும் எல்லோரையும்
ஏதேதோ க‌தைக்கிறாரென‌
செவிடு பாய்ச்சுவ‌து
எப்ப‌டி அக‌ந்தையாகும்?
புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌
உல‌க‌த்தில்....

பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌
குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து
கோரிக்கையோ கட்டளையோ
இல்லாத செல்லச் சிணுங்களில்
சிக்குண்டுச் சிரிப்பதை
ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா?

செய‌ற்கையாய் சிரித்துச் சிரித்து
க‌ண்ணில் நீர்வர மெய்யாய்
சிரித்த‌து எப்போது?
நினைவேயில்லை

வலி நிர‌ப்பி வடித்த
வார்த்தைச் சித்திர‌மெல்லாம்
அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில்
அதே காயாத‌ குருதி வாச‌னை
கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும்
தைக்க‌ப்படவேயில்லை

சுயமெனும் இருள்வெளி தாண்டி
புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌
வாய்ப்புகளெல்லாம் வாகாய்
வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌
விரும்பிய‌ திசை எதுவென
தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி....

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை
க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி
ஏனோ,
வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை
வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை

கூர்மங்கிய நாக்குகளினால்
குத்தப்பட்ட சொற் காயங்கள்
உயிர் நீங்கலாக
மற்றதை மாய்த்தும்
அவர் மனம் நோகுமென
பதிலடி தராத பரிதாப தருணங்கள்
அறிவிலி வாழ்க்கையில்
அனேகம் நிகழ்வதால்
இப்பெயர் பெற்றேன்
காரணம் அறிக‌!

ஒரு வருத்தமான நிகழ்வின் போது எழுதியது.அதுபோலுமின்று ஐம்பதாம் நிகழ்வு. வாங்க கொண்டாடலாம்.:))

7 comments:

நாமக்கல் சிபி said...

50க்கு வாழ்த்துக்கள்!


எங்களுக்கு இன்னொரு கவிதாயிணி கிடைச்சிட்டா!

உணர்வுகளை அழகுறத் தொடுத்திருக்கிறீர்கள்! என்ன பண்ணுறது இப்படியெல்லாம் நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது!

ஆனா நம் இயல்பை நாம் விட்டுவிடத் தேவை இல்லை! ஒருபோதும்!

மகிழும் தருணங்களில் மகிழ்வோம்! அழும் தருணங்களில் அழுவோம்! நமக்கு நாமே வாழ்வோம்! நமக்காக நாம் நடிக்கத் தேவையில்லையே!

சுசி said...

வாழ்த்துக்கள் கயல்.

//கூர்மங்கிய நாக்குகளினால்
குத்தப்பட்ட சொற் காயங்கள்
உயிர் நீங்கலாக
மற்றதை மாய்த்தும்
அவர் மனம் நோகுமென
பதிலடி தராத பரிதாப தருணங்கள்
இந்த அறிவிலி வாழ்க்கையில்
அனேகம் நிகழ்வதால்
இப்பெயர் பெற்றேன்
காரணம் அறிக‌! //

என்னப் பத்தியா எழுதி இருக்கிங்க கயல்?? :))

நர்சிம் said...

50க்கு வாழ்த்துகள்

கயல் said...

//
என்.ஆர்.சிபி said...

50க்கு வாழ்த்துக்கள்!


எங்களுக்கு இன்னொரு கவிதாயிணி கிடைச்சிட்டா!

உணர்வுகளை அழகுறத் தொடுத்திருக்கிறீர்கள்! என்ன பண்ணுறது இப்படியெல்லாம் நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது!

ஆனா நம் இயல்பை நாம் விட்டுவிடத் தேவை இல்லை! ஒருபோதும்!

மகிழும் தருணங்களில் மகிழ்வோம்! அழும் தருணங்களில் அழுவோம்! நமக்கு நாமே வாழ்வோம்! நமக்காக நாம் நடிக்கத் தேவையில்லையே!

//

நன்றி!

கயல் said...

//
சுசி said...
வாழ்த்துக்கள் கயல்.

//கூர்மங்கிய நாக்குகளினால்
குத்தப்பட்ட சொற் காயங்கள்
உயிர் நீங்கலாக
மற்றதை மாய்த்தும்
அவர் மனம் நோகுமென
பதிலடி தராத பரிதாப தருணங்கள்
இந்த அறிவிலி வாழ்க்கையில்
அனேகம் நிகழ்வதால்
இப்பெயர் பெற்றேன்
காரணம் அறிக‌! //

என்னப் பத்தியா எழுதி இருக்கிங்க கயல்?? :))
//

ஹி ஹி ஹி !!!

உங்களப்போய் திட்டுவேனா தலீவி!
நன்றி சுசி!

கயல் said...

//
நர்சிம் said...
50க்கு வாழ்த்துகள்
//

நன்றிங்க!

வருகைக்கும் வாழ்த்துக்கும்!

sundar said...

50க்கு வாழ்த்துக்கள்! கயல் !

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!