Tuesday, August 28, 2012

கனவு

பட்டாடைகள் மினுமினுக்க
குதிரையில் உலா வரும்
இளவரசனின் கதை கேட்டபடி
எச்சில் ஒழுக உறங்கிப்போகிறாள்
கந்தலாடைச் சிறுமி

கற்பனைக்கேற்றபடி
நிதமொரு அலங்காரம்
இவள் கனவில்
அவனுக்கு

பாட்டியின் சாமர்த்தியம்
பட்டாடைகள்
ராஜாக்கள் உடையென
நம்ப வைத்ததில்...

உலகம் புரியும் வரை
இதே தொனியில் தான்
அத்தனை கதையும்

உலகம் புரிந்தபின்
வயிற்றின் இரைச்சலில்
கனவுகள் வருமோ எவரறிவார்?

1 comment:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!