Sunday, February 5, 2012

கவித்துளி

கவிதை சொல்வதை
கைத்தொழிலாய் கொண்டால்
உணர்வோடு உயிர்ப்பும்
போகக்கூடும்

வெறும் சொற்களின்
கூட்டமாய் கவிதை - அதில்
உவப்பில்லை எனக்கு!

நடப்பில் செரிக்கவியலாதவற்றை
எழுத்தில் சொல்லி
உயிர் கொண்டெழுகிறேன்
வடிகாலாய் கவிதைகள்!

சில மனங்கள்
நனையக்கூடும்

சூழ்நிலை சார்ந்து
ஏதேனும் ஒருதுளியேனும்
கடல் சேரலாம்
அதனதன் படைப்பின்
காரணத்தை தாங்கியபடி!



2 comments:

மதி said...

மிக அருமையான கவிதை .. ஒரு நனைந்த மனது சொல்கிறது :-)

santhanakrishnan said...

கடலிலும் சேரலாம்.
மழையாய் மாறியும் நனைக்கலாம்.
ஒரு துளி பெருவெள்ளம்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!