Monday, January 30, 2012

மாறுதல்

நினைவிருக்கிறது
ஒரு கோடைகாலத்தில் 
களைப்பில் தலைசாய்ந்ததும்
மனிதம் புழங்காத இவ்விடம் 
காயம் தந்ததும் 
கற்களின் கூர்முனை 
உதிரம் கொண்டதும்!

இப்போதும் 
அதே கற்களின் மீதே என்படுக்கை
இடையே வழுக்கிக் கொண்டோடுகிறது 
நட்பெனும் மழைநீர்!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!