நினைவிருக்கிறது
ஒரு கோடைகாலத்தில்
களைப்பில் தலைசாய்ந்ததும்
மனிதம் புழங்காத இவ்விடம்
காயம் தந்ததும்
கற்களின் கூர்முனை
உதிரம் கொண்டதும்!
இப்போதும்
அதே கற்களின் மீதே என்படுக்கை
இடையே வழுக்கிக் கொண்டோடுகிறது
நட்பெனும் மழைநீர்!
No comments:
Post a Comment