Tuesday, October 8, 2013

துயர்

துயரின்
கடைசிச் சொட்டும்
காய்ந்து விடும் வரை..

கண்ணீர் பெருகட்டும் விடு

தனிமையில் அரற்றி
ஓய்ந்து
நாளேட்டின் பக்கங்கள்
நிரம்பி வழிந்த பின்
அந்த உன்னத தருணத்தில்
பசியுணர்
பின் புசி!

அழாதிருத்தலும்
அதீத அழுத்தமென்றே
அறியப்படுகிறது

ஆகையினால்
கொஞ்சம் மனம் விட்டு
அழுது பார்!
நீ
அறியாத பாரம் நீங்கி
அமைதி பெறலாம் இனி!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!