Wednesday, July 3, 2013

கவிக் கோர்வை - 15

*

நிஜத்தில் தூரமாய்
நினைவில் நெருக்கமாய்
அல்லோகலப்படுகிறது
அதிர்ந்தறியாதயென் தனிமை

*

பனைமரத் தோப்புகளில் காற்று
பறை இசைத்து ஆர்ப்பரிக்கிறது
கருக்குகளில் அறுபட்ட
காற்றின் கதறலென
பதறிப் போகிறது மனசு

*


ஆமோதிப்பதாகவெனும் பொருளில்
தவறி வந்து விழுகிறது
ஒரு
‘ம்ம்’
அவசரத்தில் மாற்றியெழுதுகிறேன்
அதையே
‘ம்ம்ஹூம்’
என்ன சொன்னாலும்
எதுவும் செய்ய முடியாத தொலைவிலிருக்கிறான்
மனதுக்கு நெருக்கமானவன்

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!