Saturday, January 5, 2013

கவிக் கோர்வை - 01

*

ஒரேயொரு முறை 

உன் சுட்டுவிரல் 
என்னிடம் 
பிணையாகிக் கிடந்தது 
புலம்பித் தீர்க்கிறாய் 
அன்றுன்னை 
வசியம் செய்ததாய் 
வாழ்த்திப் பிரிகிறேன் 
இப்போதும் அதே பல்லவி 
நான் 
சிரித்து மழுப்பவும் 
நீ 
வெறுப்பை உமிழவும் 
நம்மிடையே 
அல்லாடிக் கொண்டிருக்கிறது 
காதல்

*

ஒற்றை முத்தத்தில் 
வேர் பிடித்து 
கிளை பரப்பி 
தழை செழித்து 
நிழல் பரப்பி 
நேசம் விரிக்கிறது 
காதல்

*

மாற்றங்கள் தொடர்ந்தபடியிருக்கின்றன 
பூவின் வாழ்வைப் போல... 
தளிர்விடுமொரு செடி 
அரும்பு 
மொட்டு 
மொட்டவிழ்தல் 
கதிரவக் குளியல் 
இதழுதிர்தல் 
மீண்டும் புதிதாய் 
ஒரு தளிர்...

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!