Thursday, July 7, 2016

திருவள்ளுவன்

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பல்லுயிர் நேயத்தை போதித்தவனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிட முடியவில்லை.
கற்றாருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பென்றவனுக்கு உலகப் பொதுமறை தந்தவனுக்கு “சங்கராச்சாரியார் சவுக்”லும் இடமில்லை.
காரணம் திருவள்ளுவர் சிலையில் பூணூல் இல்லை.
தருண் விஜய் - இதற்கு நீங்கள் சிலையெடுத்து செல்லாமலே இருந்திருக்கலாம். பாசிச சைத்தான்களுக்கு வள்ளுவப் பேராசானின் மகத்துவம் புரிந்திட வாய்ப்பேயில்லை.
தவறிழைத்துவிட்டீர்கள். உச்சகட்ட அவமானமாக உணர்கிறேன்.
“He is our mylapore man" என்று மார்தட்டும் எந்த தமிழ்(?) பிரபலத்தையாவது அழைத்து சென்றிருக்கலாம். பூஜைகளோடு இன்னும் சில ஆராதனைகளுக்கும் வாய்ப்பிருந்திருக்கும்.
புரிகிறதா? எந்த தேசியவாதிகளும் இந்த நாட்டில் சாதி தாண்டிய மறுமலர்ச்சிக்கு வித்திட முடியாது. திராவிட பண்பாடு சாதித்த சமூக விழிப்புணர்வை பெற பிற இந்திய மாநிலங்களுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டு பிடிக்குமோ?
நூற்றாண்டு தவறென்று நினைத்திருந்தேன் ஒரு அம்பேத்கார் ஒதுக்கப்பட்டதை....
ஐயனே! உமக்குமா இந்த நிலை?
பூணூல் தரிக்காத வள்ளுவனுக்கு கோட்டமே உண்டு எங்களூரில் ....
பேராசானவன்! அவனை மதிக்கத் தெரியாத இடத்தில் வைத்து அவமரியாதை செய்யாதிருங்கள் இந்தியர்களே!
‪#‎ச்சீ‬! மனுவாதிகளே!

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!