யாமக் கனவொன்றில்
ஆழி முத்தென்
அனுகூலமாகக் கண்டேன்
மூச்சடக்கி முத்துக் குளிக்கையில்
பவளப் பாறையும் பக்கமிருந்தது
இருசோடி கடற்கன்னிகள்
அபிநயங்களுக்கிடையில்
கனவில் கண்டதை நேரில் கண்டேன்
பேராசை படர்ந்த கோரமுகம் கண்டு
நெருப்பைக் கக்கிவிட்டு
நீங்கிப் போயினர்
நீர்மக் குடும்பத்தினர்
நிலவொளியில் ஒளிர்ந்ததை
தொட்டுப் பறிக்க கைகள் நீளுமுன்
இதழ் பூட்டிக் கொண்டன சிப்பிகள்
’நாளைய கனவில் வா! அபகரிக்கலாம்’
நம்பிக்கையாய் ஒலித்தது அசரிரீ
அன்று பிரிந்தது உறக்கம்
கனவுக்கென காத்திருத்தலில்
வியர்வை குடித்து விடிகிறது இரவுகள்
ஆழி முத்தென்
அனுகூலமாகக் கண்டேன்
மூச்சடக்கி முத்துக் குளிக்கையில்
பவளப் பாறையும் பக்கமிருந்தது
இருசோடி கடற்கன்னிகள்
அபிநயங்களுக்கிடையில்
கனவில் கண்டதை நேரில் கண்டேன்
பேராசை படர்ந்த கோரமுகம் கண்டு
நெருப்பைக் கக்கிவிட்டு
நீங்கிப் போயினர்
நீர்மக் குடும்பத்தினர்
நிலவொளியில் ஒளிர்ந்ததை
தொட்டுப் பறிக்க கைகள் நீளுமுன்
இதழ் பூட்டிக் கொண்டன சிப்பிகள்
’நாளைய கனவில் வா! அபகரிக்கலாம்’
நம்பிக்கையாய் ஒலித்தது அசரிரீ
அன்று பிரிந்தது உறக்கம்
கனவுக்கென காத்திருத்தலில்
வியர்வை குடித்து விடிகிறது இரவுகள்
1 comment:
அருமை.
சில திருத்தங்கள்:
'விடிகிறது' என்பது 'விடிகின்றன' என இருக்க வேண்டும்.
'நிலவொளில்' லா? 'நிலவொளியில்' லா?
Post a Comment
வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!