கனன்ற நெருப்பில்
சிதைந்து போனது
புலையர்பாடி அடையாளங்கள்
சிதையின் புகையில்
கலந்த ஆன்மா
எவரையும் சட்டைசெய்யாமல்
சிவனையடைந்தது
நந்தன் அடியாரானது தெரியாமலே
ஆன்மசுத்தி மந்திரங்கள் முழங்கியபடியிருந்தனர்
தில்லையம்பதியின் வேதவிற்பனர்கள்
முன்னதை போல இதற்கும்
சிலையென சிரித்தபடியிருந்தான்
சித்தனான சிவக்கடவுள்!
சிதைந்து போனது
புலையர்பாடி அடையாளங்கள்
சிதையின் புகையில்
கலந்த ஆன்மா
எவரையும் சட்டைசெய்யாமல்
சிவனையடைந்தது
நந்தன் அடியாரானது தெரியாமலே
ஆன்மசுத்தி மந்திரங்கள் முழங்கியபடியிருந்தனர்
தில்லையம்பதியின் வேதவிற்பனர்கள்
முன்னதை போல இதற்கும்
சிலையென சிரித்தபடியிருந்தான்
சித்தனான சிவக்கடவுள்!
No comments:
Post a Comment
வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!