Wednesday, October 9, 2013

உபரி

மரக்குதிரையில் பயணிக்கிறான்
குட்டி இளவரசன்
சாய்வு நாற்காலியில் மிதந்தபடியிருக்கிறார்
தாத்தா
ராஜபாட்டையில் குளம்படியும்
படகின் நீர்த் தளும்பலும்
மத்தியான மௌனத்தைக் கிழித்துவிடுகின்றன
வெற்றிலையிடித்து அதட்டி வைக்கிறாள் பாட்டி
எரிந்த சூரியன்
குளிர்ந்து நிலவாகிறது
தாத்தாவும் குழந்தையும்
தத்தம் அறையில்..
இராப்பூச்சிகளின் கூட்டத்திற்கு
பயண அனுபவங்களை
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றன
மரக்குதிரையும் நாற்காலியும்

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!