மரக்குதிரையில் பயணிக்கிறான்
குட்டி இளவரசன்
சாய்வு நாற்காலியில் மிதந்தபடியிருக்கிறார்
தாத்தா
ராஜபாட்டையில் குளம்படியும்
படகின் நீர்த் தளும்பலும்
மத்தியான மௌனத்தைக் கிழித்துவிடுகின்றன
வெற்றிலையிடித்து அதட்டி வைக்கிறாள் பாட்டி
எரிந்த சூரியன்
குளிர்ந்து நிலவாகிறது
தாத்தாவும் குழந்தையும்
தத்தம் அறையில்..
இராப்பூச்சிகளின் கூட்டத்திற்கு
பயண அனுபவங்களை
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றன
மரக்குதிரையும் நாற்காலியும்
குட்டி இளவரசன்
சாய்வு நாற்காலியில் மிதந்தபடியிருக்கிறார்
தாத்தா
ராஜபாட்டையில் குளம்படியும்
படகின் நீர்த் தளும்பலும்
மத்தியான மௌனத்தைக் கிழித்துவிடுகின்றன
வெற்றிலையிடித்து அதட்டி வைக்கிறாள் பாட்டி
எரிந்த சூரியன்
குளிர்ந்து நிலவாகிறது
தாத்தாவும் குழந்தையும்
தத்தம் அறையில்..
இராப்பூச்சிகளின் கூட்டத்திற்கு
பயண அனுபவங்களை
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றன
மரக்குதிரையும் நாற்காலியும்
No comments:
Post a Comment
வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!