Thursday, July 4, 2013

கவிக் கோர்வை - 16

அம்மரம்
பல உதிர்தல்களையும்
பல அமர்தல்களையும்
பரிணமித்தலில் பார்த்தே வந்திருக்கிறது
நான் துளிர்த்த இடமும்
அதில் வளர்ந்த இடமும்
வளர்ச்சிதையின் வார்த்தையாகலாம்
அதோ
பறந்தபடி இருக்கிறதே சருகு
எவருடைமை என்றில்லாத
தனித்த பெருவெளி
அதில் பச்சை இலையெனில்
அனுமதியேயில்லை
உதிர்ந்த சருகென்பதே ஏற்பு
காலத்தால்
அதிர்ந்துதிர்தலிலும் அனேகம் நன்மையுண்டு

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!