தோகை விசிறி
உறங்கச் செய்கின்றன
சாகுந்தலங்கள்
தாலாட்டாய் குயில்
தமிழ்பண் கிள்ளைகள்
மின்மினியாய் விண்மீன்கள்
புல் விரித்த படுக்கை
சுவரற்ற அகன்ற வெளி
நேரம் பொறுத்து
தென்றலும்....
கற்றை மலர் நகைப்பில்
வனம் பூசும்
நெடுங்கனவு....
விலங்கொன்றும் இடறவில்லையே
ஏன்?
உறங்கச் செய்கின்றன
சாகுந்தலங்கள்
தாலாட்டாய் குயில்
தமிழ்பண் கிள்ளைகள்
மின்மினியாய் விண்மீன்கள்
புல் விரித்த படுக்கை
சுவரற்ற அகன்ற வெளி
நேரம் பொறுத்து
தென்றலும்....
கற்றை மலர் நகைப்பில்
வனம் பூசும்
நெடுங்கனவு....
விலங்கொன்றும் இடறவில்லையே
ஏன்?
No comments:
Post a Comment
வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!