Saturday, August 14, 2010

ஒற்றை ரோஜா

இதழ் பறிக்கும் காற்றினோடு
கடும் மோதல்
அந்த ஒற்றை ரோஜாவுக்கு!
மொட்டாய் இருக்கையில்
மூடிக்காத்த இலைகள் கூட
முட்கள் போலவே இப்போது
எட்டாத தூரம்

வண்டின் வருத்தங்களை பரிகசிக்கிறது
சூலகம் காக்க திரணற்ற பூவிதழ்
காற்றின் அகோர வருடலில்
அலாதி சுகம் ருசித்து
ஆடிக்கொண்டிருந்தன தும்பிகள்!

மண்புழுவொன்றின் அகழ்வில்
பதியமிட்ட மற்றோர் கிளை
மெல்ல அசையத் தொடங்கியும்
தண்டின் பிடி தளர்வதாயில்லை

நான்
மலர் படும் பாட்டை கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நீரோவாய்
பிடிலுக்கு பதிலாய் பேனாவோடு

1 comment:

'பரிவை' சே.குமார் said...

//நான் மலர் படும் பாட்டை கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நீரோவாய்
பிடிலுக்கு பதிலாய் பேனாவோடு//

Nalla kavithai kayal.

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!