Monday, October 7, 2013

முளைவிடும் மரங்கள்

மூடிய கைகளிலிருந்து
ஒவ்வொரு விரலாய்
விடுவிக்கிறாள் மித்திரா

சின்னஞ்சிறு மரங்கள்
பத்து முளைத்திட்டதாம்

ஒரே குதூகலம்

அவள் நடக்கும் வழி தோறும்
வேடிக்கை பார்க்கவென
வரிசையில் பலநூறு மரங்கள்

1 comment:

ramesh said...

Your blog is awesome! Enjoyed lot!
Thanks for effort..!

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!