Wednesday, April 25, 2012

மௌன ஒலி


கலைத்திறன் பொருந்திய
கண்ணாடிக் கோப்பைகள்
பரிசாய் வந்தவை
முன்னொரு காலத்தில்
பேரரசிகள் புழங்கியவையாம்
துடைக்கப்படும் ஒவ்வொருமுறையும்
இதழ்களை ஒற்றுவது போலே
பதமாய்ப் பதவிசாய் ...
சந்தடியில்லாதவொரு இரவில்
திடுமென நொறுங்கிச் சிதறின
சகிக்க முடியாத மௌனம்
கலைத்த பேரதிர்வுகள்
மெல்ல மெல்ல
ஓய்ந்தே போனது!
எவருமற்ற நிதர்சனத்தில்
இன்னும் தொடரும் இரவுகளின்
மௌனம் உடைக்க

இருளின் கருமை போல
எங்கும் வியாபித்திருக்கும்
வெறுமையைக் கொல்ல
ஒலிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

எல்லாச் சப்தங்களையும்
தாலாட்டி உறங்கச் செய்கிறது
மௌனமான இரவு
நானோ ராப்பாடியாய்
ஒலிகளைத் தேடியும் பாடியும்....

2 comments:

Thoduvanam said...

எல்லா சப்தங்களையும்
தாலாட்டி உறங்கச் செய்கிறது
மௌனமான இரவு..
arumai..

பி.அமல்ராஜ் said...

அருமையான கவிதை அக்கா.

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!