Tuesday, June 2, 2009

'நறுக்'கென சில கிறுக்கல்கள்

நீரை விடுத்து பாலை
உறிஞ்சும் அன்னம்
முழுதும் நீரின் கையணைப்பில்!

**********

அலைக்கு போக்கு காட்டும்
அழகான கண்ணாமூச்சி
வளைக்குள் பதுங்கும் நண்டு!

**********

தாலாட்டும் குற்றலைகள்
மேடாகி சமமாகும் நிலவு
அரிசில் சிதற ஆர்ப்ப‌ரிக்கும் குழந்தை!

**********

துளைகளின் நடுவில்
சுவாசத்தின் பிரயாணம்
புல்லாங்குழலிசை!

**********

விழுதுகளுக்கு நடுவே
முளைவிட துடிக்கும் விதை

பின்னணியில்லாத‌ அரசியல்வாதி!

**********

தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!

**********

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!